Tamilnadu
சிசிடிவி கேமரா-வில் குளறுபடி: கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆவேசம்!
கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமரா 2 மணி நேர வித்தியாசத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரினை அடுத்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி நேற்று முன்தினம் அந்த வளாகத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோதிமணி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் அறையில்' செயல்பட்டு வரும் கண்ணாணிப்பு கேமரா 2 மணிநேரம் கூடுதல் வித்தியாசமாக செயல்படுவதாக எங்கள் முகவர் தெரிவித்தார். அதன் பின்னர் மே 3ம் தேதி இரவு 11.30-க்கு அந்த பகுதியில் பார்வையிட்டோம் ஆனால் அதில் பதிவான நேரம் 1.40. கிட்டத்தட்ட 2 மணிநேரம் கூடுதலாக கண்காணிப்பு கேமரா செயல்படுகிறது. அப்படியென்றால் அதை பயன்படுத்தி குளறுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துளோம். இங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். பின்னார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!