Tamilnadu
சிசிடிவி கேமரா-வில் குளறுபடி: கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆவேசம்!
கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமரா 2 மணி நேர வித்தியாசத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரினை அடுத்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி நேற்று முன்தினம் அந்த வளாகத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோதிமணி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் அறையில்' செயல்பட்டு வரும் கண்ணாணிப்பு கேமரா 2 மணிநேரம் கூடுதல் வித்தியாசமாக செயல்படுவதாக எங்கள் முகவர் தெரிவித்தார். அதன் பின்னர் மே 3ம் தேதி இரவு 11.30-க்கு அந்த பகுதியில் பார்வையிட்டோம் ஆனால் அதில் பதிவான நேரம் 1.40. கிட்டத்தட்ட 2 மணிநேரம் கூடுதலாக கண்காணிப்பு கேமரா செயல்படுகிறது. அப்படியென்றால் அதை பயன்படுத்தி குளறுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துளோம். இங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். பின்னார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!