Tamilnadu
சிசிடிவி கேமரா-வில் குளறுபடி: கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆவேசம்!
கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமரா 2 மணி நேர வித்தியாசத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரினை அடுத்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி நேற்று முன்தினம் அந்த வளாகத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோதிமணி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் அறையில்' செயல்பட்டு வரும் கண்ணாணிப்பு கேமரா 2 மணிநேரம் கூடுதல் வித்தியாசமாக செயல்படுவதாக எங்கள் முகவர் தெரிவித்தார். அதன் பின்னர் மே 3ம் தேதி இரவு 11.30-க்கு அந்த பகுதியில் பார்வையிட்டோம் ஆனால் அதில் பதிவான நேரம் 1.40. கிட்டத்தட்ட 2 மணிநேரம் கூடுதலாக கண்காணிப்பு கேமரா செயல்படுகிறது. அப்படியென்றால் அதை பயன்படுத்தி குளறுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துளோம். இங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். பின்னார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
-
முதலீடுகள் விவகாரம் : திமுக மீது பொய் பழி.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் கொடுத்த பதிலடி என்ன?