Tamilnadu
3 மெட்ரோ ரயில்ஊழியர்கள் சஸ்பெண்ட் - எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் நிர்வாகம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முடக்கியதாக மேலும் மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்.
தொழிற்சங்கம் தொடங்கியதாக மெட்ரோ ஊழியர்கள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் நீக்கத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி மெட்ரோ ரயில் ஊழியர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. அதில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படாததால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஊழியர்களை மேலும் கொந்தளிக்கச் செய்யும் விதமாக மனோகரன், பிரேம்குமார், சிந்தியாரோஷன் ஆகிய மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை பாரிமுனையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன்,மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பினர்,சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன், ஆகியோர் பங்கேற்றுள்ளனர்பண்
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!