Tamilnadu
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
தமிழகத்தில் உள்ள 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. அவற்றிற்கான கலந்தாய்வு 2-வது ஆண்டாக ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 2-ம் தேதி துவங்கி மே 31-ம் தேதி வரை கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.tnea.ac.in மற்றும் ww.annauniv.edu என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அரசு அமைத்துள்ள உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11-ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
ஜுன் 17-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 3-ம் தேதி துவங்கி ஜூலை 30-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதற்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி மையங்கள் வாயிலாகவும், வீட்டிலிருந்தபடியும் மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !
-
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?