Sports
ஆண்களுக்கு இணையாக பெண்கள் பங்களிப்பு : பாலின சமத்துவத்தில் சாதனை படைத்த பாரிஸ் ஒலிம்பிக் !
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வரும் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளஇந்த தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பிக் தொடரில் மொத்தமுள்ள வீரர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக பதிவாகியுள்ளது பாலின சமத்துவ சாதனையாக உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது இந்த தொடரில் 5,250 ஆண்களும் 5,250 பெண்களும் கலந்துகொள்கின்றனர். 1896-ம் ஆண்டு நவீனகால முதல் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. எனினும் அந்த தொடரில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பின்னர் 1900 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் பெண்கள் வீராங்கனைகளின் பங்களிப்பு 2.2 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து வந்த ஒலிம்பிக் தொடர்களில் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அது 1988-ம் ஒலிம்பிக் தொடரில் பெண்களின் சதவீதம் 25 % என அதிகரித்தது.
அதன் பின்னர் பெண்களின் பங்களிப்பு அசூர வளர்ச்சி பெற்ற நிலையில், தற்போது பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்கேற்பும் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!