Sports
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!
சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் விவேகானந்தா கல்வி கழகத்தின் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான 39-வது ஆண்டு மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பத்மஶ்ரீ அனிதா பால்துரை கலந்து கொண்டார்.
சுமார் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களுக்கு இடையே தடகளம், ரிலே, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை அனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "கடந்த 4-5 ஆண்டுகளாக விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல அதையெல்லாம் முறியடித்து பதக்கம் வென்றுள்ளோம்.
அதேபோல ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் போதுமான ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த 2-3 ஆண்டுகளாக வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள் கடின உழைப்புடன் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதே உழைப்பை தொடர்ந்து வந்தால், நிச்சயமாக பதக்கம் வெல்வார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கி உள்ளதால் ஏராளமானனோர் அதிக அளவில் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். இந்த அருமையான வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?