Sports
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!
சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் விவேகானந்தா கல்வி கழகத்தின் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான 39-வது ஆண்டு மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பத்மஶ்ரீ அனிதா பால்துரை கலந்து கொண்டார்.
சுமார் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களுக்கு இடையே தடகளம், ரிலே, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை அனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "கடந்த 4-5 ஆண்டுகளாக விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல அதையெல்லாம் முறியடித்து பதக்கம் வென்றுள்ளோம்.
அதேபோல ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் போதுமான ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த 2-3 ஆண்டுகளாக வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள் கடின உழைப்புடன் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதே உழைப்பை தொடர்ந்து வந்தால், நிச்சயமாக பதக்கம் வெல்வார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கி உள்ளதால் ஏராளமானனோர் அதிக அளவில் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். இந்த அருமையான வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!