Sports
"பாகிஸ்தானின் PSL தொடரை விட IPL தொடர்தான் சிறப்பானது" - ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா கருத்து !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உலகிலேயே ஐபிஎல் தொடர் தான் சிறந்த கிரிக்கெட் தொடர் என ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், " உலகிலேயே ஐபிஎல் தொடர்தான் உயர்தரமானது. நான் பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரில் விளையாட உள்ளேன். அந்தத் தொடருக்காக நான் காத்திருக்கிறேன். இந்த தொடர் நான் ஐபிஎல் தொடரில் ஆட உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரின் சிறப்பே உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வீரர்கள் விளையாடுவதற்கு அதனை தேர்ந்தெடுப்பதுதான்.
எனவே உலகின் சிறந்த லீக் என்று சொல்லும் போது ஐபிஎல் மற்ற தொடர்களை விட வெகு தொலைவில் முன்னணியில் இருக்கிறது. பிஎஸ்எல் தொடரும் கிட்டத்தட்ட சிறந்த தொடராகும். ஆனால் ஐபிஎல்தான் இந்த உலகிலேயே சிறந்த லீக் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
RGNIYD நிறுவனத்தில் RSS தலைமையைக் கொண்டுவர சூழ்ச்சி : விடுதலை நாளேடு எச்சரிக்கை!
-
”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!
-
”பா.ஜ.க.வின் தோல்வி தவிர்க்க முடியாதது” : காரணத்தை பட்டியலிட்ட அகிலேஷ்!
-
”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!
-
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு !