Sports
பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் : உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு !
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஷ்ரேயாஸ் 4 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 81/3 என சரிவை சந்தித்த நிலையில், விராட் கோலி - கே.எல்.ராகுல் இணை நிதானமாக ஆடினர். தொடர்ந்து அரைசதம் விளாசிய விராட் கோலி 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜடேஜா 9 ரன்னுக்கு வெளியேறினார்.
பின்னர் நிதானமாக ஆடிய கே.எல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூரியகுமார் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷமி 6 ரன்னுக்கும், பும்ரா 1 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, இறுதிக்கட்டத்தில் குல்தீப் 10 ரன்களும், சிராஜ் 9 ரன்களும் குவிக்க இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்த மைதானம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் நிலையில், இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!