Sports
"இந்தியா தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதிவரை இருக்கும்" - ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கணிப்பு !
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 9 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்து அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 102 ரன்கள் குவிக்க, ஷ்ரேயாஸ் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் லீக் போட்டிகளில் தோல்வியே தழுவாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதி வரை இந்திய அணியினர் இருப்பார்கள் என்றே நம்புகிறேன் என முன்னாள் மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தொடர் வெற்றிகளுடன் கோப்பையை வெல்வதை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் இந்திய அணியின் எண்ணமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆக்ரோஷமான அணுகுமுறை இந்தியர் வீரர்களுக்கு இதுவரை திறம்பட வேலை செய்துள்ளது. இத்தகைய மனநிலையிலிருந்து கீழே இறங்கினால் ஏதாவது தவறு நிகழ்ந்து விடும். அவர்கள் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதி வரை இருப்பார்கள் என்றே நம்புகிறேன். இதற்காகத்தான் அவர்களும் முயற்சி செய்கிறார்கள்.இது வரை நன்றாக ஆடிவிட்டோம். எனவே ஏதோ ஒரு கட்டத்தில் மோசமான ஆட்டம் வந்தே தீரும் என்ற பயம் ஏற்படலாம். இத்தகைய எதிர்மறை சிந்தனைகளை மனதிலிருந்து அறவே களைந்து நெகெட்டிவ் எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!