Sports
"ஹர்பஜனை பார்த்து மைதானத்துக்கு வா உன்னை அடிச்சி ஓட விடுறேன் என்பேன்" -வீரேந்திர சேவாக்கின் கலகல பேச்சு !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
தற்போது 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் ஐபிஎல் தொடரில் ஆடியபோது ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக விவரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் ஆடியபோது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. இந்திய அணியில் ஜகீர் கான், நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் நாங்கள் வேறு வேறு அணிக்கான ஆடிவந்தோம்.
போட்டிக்கு முன்னர் பயிற்சியின்போது ஒருவரை ஒருவர் சந்தித்தால் மைதானத்துக்கு வா உன்னை அடிச்சி ஓட விடுறேன் என விளையாட்டாக பேசிக்கொள்வோம். ஐபிஎல் தொடக்க காலத்தில் இந்திய அணியில் ஆடிய சொந்த அணி வீரர்களுக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மாறுபட்ட உணர்வாக இருந்தது." என்று கூறியுள்ளார்.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!