Sports
"ரோஹித் சர்மா கண்டிப்பாக அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்": அடித்து சொல்லும் முன்னாள் வீரர்
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அணியில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது. குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்பட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியைத் தயார் படித்து வருகிறது. இதனால்தான் இலங்கை, நியூசிலாந்து போன்ற தொடர்களில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர்கள் சுப்மன் கில், இஷான் கிஷான் தங்களது அதிரடி ஆட்டத்தைக் கொடுத்து இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை உறுதிசெய்துள்ளனர். இதனால் அடுத்தடுத்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மூத்த வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ஓய்வு என்று காரணம் சொன்னாலும் அவர்கள் ஒதுக்கப்படுவது நன்றாகவே தெரிகிறது.
இந்நிலையில், அடுத்து நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கூறிய வாசிம் ஜாஃபர், " இனி வரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டு இளம் வீரர்களுக்கானதாகவே இருக்கும். என்னுடைய கணிப்புப்படி அடுத்த டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார். ஆனால் விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளது. அதேபோல் இளம் வீரர்கள் நன்றாக விளையாடி வருவதால் அவர்களுக்கு யாருடைய வழிகாட்டலுக்கும் தேவை இருக்காது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!