Sports
'எழுந்து வா ரிஷப் பண்ட்' .. உருக்கமான கோரிக்கை வைத்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!
16 ஆவது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் கேரளாவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் நடந்து முடிந்தது. இதையடுத்து ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்திய வீரர்கள் சிலர் தொடர் போட்டிகளில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் ஐ.பி.எல் போட்டி நடக்கும் போது எனது அருகே அமர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள ரிக்கி பாண்டிங், "ரிஷப் பண்ட் எங்கள் அணிக்குத் தேவை. ஒரு கேப்டனாக அணி வீரர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அவர் எங்களுக்குத் தேவை. அவர் விளையாடுவதற்கான உடல்தகுதி இல்லை என்றாலும் மைதானத்திற்கு வந்து போட்டிகளை காணும் அளவிற்குத் தயாராகிவிட்டால் போதும். ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது எனது அருகில் அமர்ந்து ரிஷப் பண்ட் போட்டிகளைக் காணவேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் சாலை விபத்தில் சிக்கி மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதால் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !