Sports
"அடேய் காமெராமேன்,, என்னை இப்படியா கோத்துவிடுவ! " - அஸ்வினின் செயலை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. முன்னதாக இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்பே அணியை எதிர்கொண்டது. அப்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் போடும்போது மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னால் அஸ்வின் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மைதானத்தில் இருந்த 2 ஸ்வெட்டர் இருந்துள்ளது. அதில் அஸ்வினின் ஸ்வெட்டரும் ஒன்று. ஆனால் அதில் எது தனக்குரியது என தெரியாததால் அஸ்வின் அது இரண்டையும் எடுத்து அதை மோர்ந்து பார்த்துள்ளார். பின்னர் அதில் ஒன்று தனதுடையது என்பதை உறுதி செய்த அவர் அதை எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ நேரலையில் வெளியான போது பலர் அதனை கவனிக்கவில்லை. ஆனால் சிலர் அந்த வீடியோவை பார்த்து அதை இணையதளத்தில் பதிவிட்டனர். அதன்பின்னர் அது வைரலாகியுள்ளது. பலரும் அஸ்வின் ஏன் அப்படி செய்தார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த வீடீயோவை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அப்படி என்ன மோந்து பார்க்கிறீர்கள் அஷ்வின் என்று கிண்டல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இத்தகைய கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதில் "முதலில் இரண்டுக்கும் இடையேயான அளவுகளை (சைஸ்) சோதித்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அதில் எந்த வீரருடைய பெயரின் முதல் எழுத்து எழுதப்பட்டுள்ளது என்பதை சோதித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கடைசியாக நான் உபயோகப்படுத்தும் வாசனை பெர்பிஃயூம் வாசனையை வைத்து என்னுடையதை கண்டுபிடித்தேன். அடேய் கேமராமேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிலும் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
NEET 2024 தேர்வு மோசடி விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !