Sports
சிறைக்கு செல்லும் பிரபல கால்பந்து வீரர் - நிரந்தர தடை விதிக்க முன்னாள் CLUB கோரிக்கை!பின்னணி என்ன?
பிரபல கால்பந்து வீரர் நெய்மர், பிரேசிலை சேர்ந்த சாண்டோஸ் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த திறமையை கண்ட உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப் அவரை தங்கள் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சாண்டோஸ் கிளப்பும் புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதனிடையே பார்சிலோனா கிளப்பிலிருந்து விலகிய நெய்மர் பிரான்ஸை சேர்ந்த PSG கிளப்பில் இணைந்தார். இந்த ஒப்பந்தமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வரை நெய்மர் PSG கிளப்பில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், நெய்மர் மீது நீதிமன்றத்தில் நடந்த வந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கத்தாரில் நடைபெறும் பிஃபா உலகக்கோப்பைக்கு முன்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த வழக்கில் நெய்மர் மற்றும் அவரது தந்தை, சாண்டோஸ் கிளப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு தண்டனை உறுதியானால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த விவகாரத்தை நெய்மரின் முன்னாள் கிளப் தீவிரமாக எடுத்துள்ளது. அவரின் இந்த முறைகேட்டுக்காக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இனிமேல் அவர் முழுவதுமாக கால்பந்து விளையாட தடை விதிக்க வேண்டும் என முறையிடப் போவதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!