Sports
"ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டோடு ஓய்வு பெற்று விடுவார்"- ரவி சாஸ்திரியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றார். 31 வயதில் அவர் ஓய்வு பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அவர், மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதாகவும், நாங்கள் பெட்ரோல் போட்டதும் ஓடும் கார் கிடையாது என்றும் விமர்சித்தார்.
கிரிக்கெட் வாரியங்கள் அதிக பணத்துக்காக இவ்வாறு அடிக்கடி போட்டிகள் நடத்துவதால் வீரர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், ஒரு தொடருக்கும் அடுத்த தொடருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார், வீரர்கள் ஓய்வு குறித்து பேசிய அவர், வீரர்கள் தாங்கள் எந்த ஃபார்மட்டில் ஆடவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதில் பாண்டியா உறுதியாக இருக்கிறார். வேறு எதிலும் ஆடுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆடுவார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடுவார். மற்ற வீரர்களும் தாங்கள் ஆடவேண்டிய ஃபார்மட்டை அவர்களே தேர்வு செய்துகொண்டு, விரும்பாத ஃபார்மட்டிலிருந்து விலகிவிடுவார்கள். அது அவர்களது உரிமை." என்று கூறியுள்ளார்.
Also Read
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!