Sports
மார்ச் 26ல் துவங்கும் 15வது ipl சீசன்.. முதல் போட்டியில் csk vs kkr : முழு அட்டவணை இதோ!
2022ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் மெகா ஏலம் கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சுமார் 200 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 15வது ஐ.பி.எல் சீசனுக்கான போட்டி அட்டவணையை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மார்ச் 26ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கான ஆவல் அதிகரித்துள்ளது. அடுத்தநாள் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
மேலும் வழக்கமாக நடைபெறுவதுபோல் ஒரேநாளில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7,30 மணிக்கும் தொடங்குகிறது.
கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தன. இம்முறை கூடுதலாக இரண்டு அணிகள் புதிதாகக் களம் இறக்கப்பட்டுள்ளது. குஜராத் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், லக்னோ அணி கேஎல் ராகுல் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.
இந்த அணிகளுக்கான போட்டி மார்ச் 28ம் தேதி நடைபெறுகிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அணைத்து ஐ.பி.எல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்கள் அந்தந்த அணிகளில் மாநிலங்களில் ஒன்றிரண்டு போட்டிகள் இருக்கும்.
இதனால் ரசிகர்கள் தங்கள் அணிக்கு உற்சாகமாக ஆதரவு கொடுப்பார்கள். இந்த முறை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 26ம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள் மே 22ம் தேதி வரை 58 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்த 70 போட்டிகள் இந்த தொடரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!