Sports
முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் புகார்: மாயமான பிரபல டென்னிஸ் வீராங்கனை : சக வீரர்கள் அதிர்ச்சி!
சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய். இவர் அண்மையில் முன்னாள் சீன துணைப் பிரதமர் மீது பாலியல் புகார் கூறியது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் குறித்து டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், “முன்னாள் துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி தன்னை பல ஆண்டுகளாகப் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதற்கு நான் மறுத்தபோதும் என்னைப் பலவந்தப்படுத்தினார். இதற்கான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. ஆனால் அவரது மனைவிக்கு இது தெரியும்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை அதிபர் மீதான டென்னிஸ் வீராங்கனையின் பாலியல் புகார் சீனாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் சக டென்னிஸ் வீரர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் கூறியதை அடுத்து பெங் ஷுவாய் எங்க இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் அவருக்கு ஏதோ நடந்து விட்டது என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய்க்கு ஆதரவாக சக வீரர்கள் செரினா வில்லியம்ஸ், நவோமி ஓசாகா, ஜோகோவிக் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்
இந்நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் பெங் ஷுவாய் இருப்பதுபோன்ற படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புகைப்படம் குறித்த தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
Also Read
-
விசிக வழங்கும் விருதுகள் பட்டியல் அறிவிப்பு : நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது !
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
-
பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!