Sports
ஆடு பகை.. குட்டி உறவு..? மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சர் ஆனது சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம்!
இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுறுவியதை அடுத்து அதற்கு மத்திய அரசு சார்பாக பெரிதளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒரு அறிக்கையோ, ட்விட்டர் பதிவோ கூட பகிராமல் இருந்த மோடி அரசு, இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து சீனவைச் சேர்ந்த பல்வேறு செயலிகளை தடை செய்திருந்தது.
மேலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களும் சீன பொருட்களை புறக்கணிப்பதாகச் சொல்லி டிவிக்களை உடைத்து எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லி சீனாவைச் சேர்ந்த ஃபோன்களிலேயே அதனை பதிவும் செய்திருந்தனர். அதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த 13வது ஐபிஎல் சீசனுக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீன நிறுவனமான விவோ விலகியது.
அதன் பிறகு ட்ரீம் 11 நிறுவனத்துக்கு கைக்கு டைட்டில் ஸ்பான்சர் மாறியது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசனுக்கான பிரதான ஸ்பான்சராக மீண்டும் விவோ நிறுவனம் உள் நுழைந்துள்ளது. ஏனெனில், 2018ம் ஆண்டு பிசிசிஐ உடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி 5 ஆண்டுகளுக்கு விவோ நிறுவனமே டைட்டில் ஸ்பான்சராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிசிசிஐக்கு ரூ.440 கோடி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஊடகங்களில் மட்டும் சீனா உடனான எந்த உறவும் இல்லையென வெளி வேஷம் போடும் மோடி ஆதரவாளர்கள் தற்போது கோடிக்கணக்கான வருமானத்திற்காக மீண்டும் விவோ நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயலாக பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!
-
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!