Sports
#BorderGavaskarTrophy: கோப்பையை நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த கேப்டன் ரஹானே! #GabbaTest (Album)
பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் கண்டு வெற்றிக் கனியை பரிசாக அளித்திருக்கிறார்கள்.
இரண்டுக்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது. சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்திய பெருமையையும் கேப்டன் அஜின்கியா ரஹானே தலைமையிலான இளம் கிரிக்கெட் வீரர்கள் பெருமையை பெற்றுள்ளனர். இதனையடுத்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 9வது முறையாக வென்றுள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருதையும் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, தமிழக வீரரான நடராஜனை அழைத்து கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் ஆட்டத்தின் சில மகிழ்ச்சி தருணங்கள் படங்களாக:-
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !