Sports
#BorderGavaskarTrophy: கோப்பையை நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த கேப்டன் ரஹானே! #GabbaTest (Album)
பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் கண்டு வெற்றிக் கனியை பரிசாக அளித்திருக்கிறார்கள்.
இரண்டுக்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது. சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்திய பெருமையையும் கேப்டன் அஜின்கியா ரஹானே தலைமையிலான இளம் கிரிக்கெட் வீரர்கள் பெருமையை பெற்றுள்ளனர். இதனையடுத்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 9வது முறையாக வென்றுள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருதையும் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, தமிழக வீரரான நடராஜனை அழைத்து கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் ஆட்டத்தின் சில மகிழ்ச்சி தருணங்கள் படங்களாக:-
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!