Sports
விராட் கோலிக்கு அது சிரமம்; ரோஹித்திடம் பொறுப்பை கொடுக்கலாம் - யுவராஜ் சிங்!
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. கோலியின் தலைமையின் கீழ் தற்போது வரை இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது.
இருந்த போதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமென முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் யுவராஜ் சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “முன்பெல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைப்பெற்று வந்தன. தற்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். எனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக செயல்பட வைத்து T20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் ரோகித் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எல் தொடரிலும் அவர் கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார்.
T20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று கூறினார்.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!