Sports
விராட் கோலிக்கு அது சிரமம்; ரோஹித்திடம் பொறுப்பை கொடுக்கலாம் - யுவராஜ் சிங்!
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. கோலியின் தலைமையின் கீழ் தற்போது வரை இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது.
இருந்த போதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமென முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் யுவராஜ் சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “முன்பெல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைப்பெற்று வந்தன. தற்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். எனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக செயல்பட வைத்து T20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் ரோகித் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எல் தொடரிலும் அவர் கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார்.
T20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று கூறினார்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!