Sports
இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட்டால் ஏற்பட்ட குழப்பம் : சர்ச்சை குறித்து விளக்கமளித்த கோலி!
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் (செப்., 22) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 7.2 ஓவர்களில் தவான் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விராட் கோலி களத்தில் இருந்தார். அடுத்து களமிறங்குவதற்காக ரிஷப் பண்ட்டும் ஸ்ரேயாஸ் அய்யரும் ஒரே நேரத்தில் களத்தை நோக்கி வந்தனர்.
இதனால் போட்டியைக் கண்ட ரசிகர்கள் மட்டுமின்றி களத்தில் இருந்த கோலியும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரிஷப் பண்ட் களமிறங்க, ஷ்ரேயாஸ் அய்யர் திருப்பி சென்றார். ஆனால் இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசிய கோலி, ‘‘10 ஓவருக்குள்ளாக இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் அய்யர் வர வேண்டும், 10 ஓவரை தாண்டி 2 விக்கெட்டுகள் விழுந்தால், நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் வர வேண்டும் என முடிவு செய்திருந்தோம்.
இருவரும் ஆடுகளத்தை நோக்கி வரும்போது, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இருவரும் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும். ஏனென்றால், ஆடுகளத்திற்குள் மூன்று பேட்ஸ்மேன்கள் இருந்திருப்போம். ரிஷப்பிற்கும் ஷ்ரேயாஸ் அய்யருக்கும் இடையேயான மிஸ் கம்யூனிகேஷனால்தான் இது நடந்தது.’’ என்றார்.
கோலியின் கூற்றுப்படி பார்த்தால் ஷ்ரேயாஸ் அய்யர் தான் நான்காம் வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில், தவான் எட்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். எனவே களத்தில் இருந்த கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் தான் ஜோடி சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், ரிஷப் பண்ட் களத்திற்குச் சென்றுவிட்டார். இருவரும் ஒரே நேரத்தில் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இந்திய அணிக்கு அவமானகரமான நிகழ்வாக அமைந்திருக்கும். இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!