Sports
ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாகக் குறைப்பு : ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கிறதே..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டார். இருப்பினும் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்தது.
இதன் பின்பு கிரிக்கெட் தொடர்பாக எதிலும் பங்குபெறாத ஸ்ரீசாந்த் திரைப்படத்தில் நடித்து, இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் பி.சி.சி.ஐ-யின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்.
2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதிக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஸ்ரீசாந்துக்கு ஆறுதலை கொடுத்திருந்தாலும், அடுத்த ஆண்டுக்குள் 37 வயதை எட்டவுள்ளதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
Also Read
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?