Sports
ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாகக் குறைப்பு : ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கிறதே..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டார். இருப்பினும் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்தது.
இதன் பின்பு கிரிக்கெட் தொடர்பாக எதிலும் பங்குபெறாத ஸ்ரீசாந்த் திரைப்படத்தில் நடித்து, இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் பி.சி.சி.ஐ-யின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்.
2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதிக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஸ்ரீசாந்துக்கு ஆறுதலை கொடுத்திருந்தாலும், அடுத்த ஆண்டுக்குள் 37 வயதை எட்டவுள்ளதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!