Sports
செஞ்சுரியில் சாதனைகளை தனதாக்கிய விராட் கோலி : தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறைபடி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி 99 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 43வது சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.
கோலி இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளையும் தனதாக்கியுள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்துள்ளார் கோலி. சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 70 இன்னிங்ஸில் 9 சதம் அடித்துள்ளார். கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 35 இன்னிங்ஸில் 9 சதங்கள் அடித்துள்ளார்.
கோலி, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 21 சதங்கள் எடுத்துள்ளார். கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களில் ஆஸி-யின் ரிக்கி பாண்டிங் 22 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 220 இன்னிங்ஸில் கேப்டனாக செயல்பட்டு 22 சதமடித்துள்ளார். கோலி 76 இன்னிங்ஸிலேயே 21 சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!