Sports
இன்ஸ்டாகிராம் தெருவுக்கு வந்த ரோஹித் - கோலி சண்டை : முற்றுகிறதா பனிப்போர் ?
உலகக்கோப்பையை நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகத் செய்திகள் வெளியாகின.
அதில், ரோஹித்தின் யோசனைகளை விராட் கோலி கேட்கவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய அணியின் கேப்டன்சியை ரோஹித் சர்மாவிடம் வழங்க பி.சி.சி.ஐ ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியானது.
இன்னும் கோலி - ரோகித் இடையே பனிப்போர் நிலவி வருவதை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார். இந்தச் செய்தி நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அன்ஃபாலோ செய்து இருந்தார் ரோஹித் சர்மா. ஆனால், இன்னும் விராட் கோலி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரோஹித்தை பாலோ செய்து வருகிறார்.
அவர்கள் இருவரிடையே பிரச்னை இல்லை என்று கூறப்பட்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளன. எனவே, இருவர் மத்தியிலிருக்கும் மவுனம் கலைய பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!