Sports
இந்தோனேஷியா ஓபன் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!
இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இ்ந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் சென் யு பெய் மோதினர்.
முதல் சுற்றில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் போட்டி பரபரப்பாக அமைந்தது. முதல் சுற்றின் முடிவில் 21-19 என்ற புள்ளி கணக்கில் பி.வி.சிந்து சுற்றை கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் ஆரம்பத்திலிருந்தே சிந்து ஆக்ரேஷமாக விளையாடியதால் வேகமாக முன்னேறி இரண்டாவது சுற்றை 21-10 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதனையடுத்து இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து , ஜப்பானின் யமாகுஷியும் மோத உள்ளனர்.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!