Sports
IND vs ENG ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோலி படைத்த புதிய சாதனை!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இது இத்தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வியாக அமைந்தது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ரன் ஏதிமின்றி அவுட் ஆக கேப்டன் விராத் கோலி களமிறங்கினார்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த அரைசதத்தை எட்டியதன் மூலம் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் எடுத்த முதல் கேப்டன் எனும் சாதனையைப் படைத்துள்ளார் கோலி. ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 54-வது சதம் ஆகும்.
முன்னதாக, உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக முறையே 82,77,67,72 ரன்கள் அடித்த்திருந்தார் கோலி. 4 அரை சதங்கள் அடித்துள்ள தென் ஆப்ரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய அரைசதம் மூலம் அவர்களது சாதனைகளை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணி கேப்டன் விராத் கோலி.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!