Sports
IND vs ENG ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோலி படைத்த புதிய சாதனை!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இது இத்தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வியாக அமைந்தது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ரன் ஏதிமின்றி அவுட் ஆக கேப்டன் விராத் கோலி களமிறங்கினார்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த அரைசதத்தை எட்டியதன் மூலம் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் எடுத்த முதல் கேப்டன் எனும் சாதனையைப் படைத்துள்ளார் கோலி. ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 54-வது சதம் ஆகும்.
முன்னதாக, உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக முறையே 82,77,67,72 ரன்கள் அடித்த்திருந்தார் கோலி. 4 அரை சதங்கள் அடித்துள்ள தென் ஆப்ரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய அரைசதம் மூலம் அவர்களது சாதனைகளை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணி கேப்டன் விராத் கோலி.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!