Sports
ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்லுவேன் - தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை !
சென்னை விமான நிலையத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த நான் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வேண்டுள்ளேன்.
தமிழகத்தில் வேலை செய்து தங்கம் வெல்ல வேண்டும் என்று தான் என் விருப்பம் என்று கூறினார். மேலும் என்னை போன்று வரும் ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் எனவும், திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பேருந்து வசதி கூட இல்லாத கிராமத்தில் இருந்து தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற பேருந்து, உணவு, மைதானம் என விளையாட்டு பயிற்சி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.அதேபோல் தமிழ்நாடு அரசு உதவி செய்தால், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!