Sports
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட வரும் மலிங்கா.
இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பவுலராக உள்ளார்.இலங்கை அணி டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. எனவே தகுதிச் சுற்றில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டிய நிலையில் உள்ளது.இதற்காக இலங்கை அணி முக்கிய வீரர்களை,அணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆகவே, உடனடியாக அவர் மும்பை அணியில் இணைய உள்ளார்.
அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மலிங்கா இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியில்,டெல்லி அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!