Politics
”மோடி அரசு அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம்” : சஞ்சய் ராவத் திட்டவட்டம்!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சியினரின் தயவில் பா.ஜ.க ஆட்சியை நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு, அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் என சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு அடுத்த ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்குமா என்பது சந்தேகம்.
இந்தமுறை மோடி தனது பதவிக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யமாட்டார்.ஒன்றியத்தில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மகாராஷ்டிரா உட்பட பிற மாநிலங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தந்தை பெரியாரின் படத்தை அகற்றியதற்காக அ.தி.மு.க வெட்கப்பட வேண்டும்” : அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்!
-
கொளத்தூரில் ரூ.11.88 கோடியில் மூத்த குடிமக்கள் உறைவிடம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
சென்னையில் ரூ.33.85 கோடி செலவில் புதிதாக 11 முதல்வர் படைப்பகங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் தவறாமல் செல்ல வேண்டிய இடம்... நவீன வசதியுடன் பசுமை பூங்கா... திறந்துவைத்தார் துணை முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மேலும் 37.79 இலட்சம் மக்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!