Politics
”மோடி அரசு அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம்” : சஞ்சய் ராவத் திட்டவட்டம்!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சியினரின் தயவில் பா.ஜ.க ஆட்சியை நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு, அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் என சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு அடுத்த ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்குமா என்பது சந்தேகம்.
இந்தமுறை மோடி தனது பதவிக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யமாட்டார்.ஒன்றியத்தில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மகாராஷ்டிரா உட்பட பிற மாநிலங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!