Politics
மதரஸா பள்ளிகளை மூட நடவடிக்கை... பாஜக மாநில அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு !
மதரஸா மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும், மதரஸா பள்ளிகளை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து உத்திரபிரதேசம், திரிபுரா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் இத்தகையை நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமின்றி அவர்களின் உரிமையை மீறும் செயல் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவுவிட்டது. மேலும் இதனை செயல்படுத்த உத்தரவிட்ட உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!