Politics
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ் : வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் !
ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக சார்பில் முதலமைச்சராக நவாப் சிங் சைனி உள்ளார். ஹரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியோடு சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையவுள்ளது.
இதன் காரணமாக ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. லோக்போல் (LokPoll) நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் 67,500 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 46 முதல் 48 சதவீத ஓட்டுகளுடன் 58 முதல் 65 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. அதே நேரம் பாஜக 25 முதல் 37 சதவீத ஓட்டுகளுடன் 20 முதல் 29 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும், பிற காட்சிகள் 3 முதல் அதிகபட்சமாக 5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!