Politics
"எங்களுக்கான நேரம் வரும், அப்போது திருப்பி கொடுப்போம்" - பாஜகவுக்கு சந்திரசேகர ராவ் மகள் எச்சரிக்கை !
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து வருகிறது. எதிர்கட்சிகளை மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தும் இருக்கிறது.
அப்படி தங்கள் கூட்டணியில் சேர மறுப்பவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து கைது செய்து அவர்கள் கட்சியை மிரட்டி வருகிறது. அண்ட் வகையில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகல் கவிதாவை டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.
தொடர்ந்து அவர் சிறையில் இருக்கும்போதே சிபிஐ-யும் அவரைக் கைதுசெய்து அவர்மீது வழக்கு பதிவுசெய்தது.இந்த இரண்டு வழக்கிலும் அவர் சுமார் 5 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனடியே அவர் ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அதில், அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் விசாரணையை முடித்துவிட்டதால், அவரை காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி கவிதாவுக்கு ஜாமின் விலகி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அவர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிதா, "இந்த வழக்கை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம். எங்கள் கட்சியை உடைக்கமுடியாததால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். நான் நிரபராதி என்பதை நிச்சயம் நிரூபிப்பேன். என்னையும் எனது குடும்பத்தையும் இதில் சிக்கவைத்தவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பேன். எங்களுக்கான நேரம் விரைவில் வரும்"என்று தெரிவித்தார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”