Politics
பொருளற்று பேசும் மோடி! : சபாநாயகருக்கு கடிதம் எழுதிய எம்.பி மாணிக்கம் தாகூர்!
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலுரை அளித்த மோடி, தம் தோல்வியை மறைக்க, பல பொய் குற்றச்சாட்டுகளையும், பொருளற்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
அதிலும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணி முன்வைத்த வாக்குறுதியான உழைக்கும் சமூகத்தினரின் பெண்களுக்கு, மாதம் ரூ. 8,500 வழங்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி, யாருக்கும் ரூ. 8,500 வரவில்லை என்றும், 16 மாநிலங்களில் காங்கிரஸின் ஓட்டு விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆட்சியைப் பிடித்தால், பெண்களுக்கு ரூ. 8,500 வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எவ்வாறு ரூ. 8,500 வழங்கப்படும் என்றும், கடந்த 2019 தேர்தலை ஒப்பிடுகையில், பல மாநிலங்களில் காங்கிரஸ் ஓட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள், மோடியின் உரையின் போது எதிர் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் விதி 115(1)இன் படி, பிரதமர் மோடியின் உரையில் பொய்களும், பொருளற்ற கருத்துகளுமே, அதிகம் இடம்பெற்றிருக்கின்றன என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இராணுவத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மோடி, இது போன்று தவறாக மக்களை வழிநடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்றும், தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!