Politics
'அக்னிபாத்' திட்டத்துக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு : பாஜகவுக்கு தொடரும் சோதனை !
ஒன்றிய பாஜக அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டத்தை எதிர்த்து பீகாரில் தொடங்கிய போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.
மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பாஜக தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மாற்றம் லோக் ஜனசக்தி கட்சிகள் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளன. அக்னிபாத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரானகே.சி.தியாகி, "அக்னிபாத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பொது சிவில் சட்டம்(UCC) குறித்து அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதே போல பீகாரில் உள்ள பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவும் மிக முக்கியம் என்பதால் பாஜக இந்த கோரிக்கையை ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!