Politics
ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்... கூட்டணியில் இருந்து வெளியேறிய JJP ? - சிக்கலில் பாஜக !
ஹரியானா மாநிலத்தில் தற்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு, பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 இடங்களிலும், சுயேட்சை 7 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஹரியானா லோகிச் கட்சி தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் பாஜக கூட்டணியோடு இணைந்து, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து அந்தந்த மாநில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஹரியானாவிலும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை சுமூமாக முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே JJP பாஜக கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக கூட்டணியில் இருக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ-வான நயன் பால் ராவத் இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நேற்று முதல்வர் கட்டாரை சந்தித்தேன். மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசுக்கு நாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளோம்.
JJP உடனான கூட்டணியை முறிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. மற்ற சுயேட்சை எம்.எல்.ஏ-க்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது." என்றார். இவரது இந்த தகவலால் ஹரியானா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. JJP கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) ஹரியானாவில் துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?” : அதிமுக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முதலமைச்சர்!
-
கொரோனாவிலும் ஊழல் செய்த பழனிசாமி, இப்போது கப்சாக்களை அடித்து விடுகிறார்... - முரசொலி விமர்சனம்!
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!