Politics
ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கிறிஸ்தவ தேவாலயத்தின் சிலுவையில் காவி கொடியை ஏற்றிய இந்துத்துவ கும்பல் !
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் இருப்பதாக கூறி இந்துத்வ கும்பல் அதனை இடித்த நிலையில், தற்போது அங்கே ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரது எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக ராமர் கோயிலை நேற்று அரசியல் நோக்கத்திற்காக திறந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளது முழுமையாக அரசியல் நோக்கத்திற்காகவே என்று கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது.
இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒரு இந்துத்துவ கும்பல் கிறிஸ்தவ தேவாலயத்தின் மேல் ஏறி, காவி கொடிகளை ஏற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது.
இங்கு கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வழக்கம் போல ஜெபக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அங்கு வந்த இந்துத்துவ கும்பல் ஒன்று ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டுள்ளது. அதோடு நிற்காத அந்த கும்பல் தேவாலயத்தின் மீது ஏறி, அங்கிருந்த சிலுவையில் காவிக்கொடியை ஏற்றியுள்ளது.
இதனை அங்கிருந்த தேவாலயத்தின் போதகர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், அவரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த கும்பல் அந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!