Politics
"பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம்" - மிசோரம் மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளும் அறிவிப்பு !
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 3-ம் தேதி (ஞாயிறு) எண்ணப்படுகிறது. அன்றே முடிவுகளில் அறிவிக்கப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதே போல தெலுங்கானாவில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. ஆனால், வடகிழக்கு மாநிலமான மிசோரம் நிலை வேறு விதமாக இருக்கிறது.
இங்கு, பாஜக சிறிய கட்சியாக இருக்கும் நிலையில், மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோரம் மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு அதிகம் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறதா என மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவருமான ஜோரம்தங்காவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த "நாங்கள் இதுவரை பாஜகவைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதேபோல அவர்களும் எங்களைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது" என்று தெரிவித்தார்.
அதே கேள்வியை ஜோரம் மக்கள் முன்னணி தலைவர் வன்லால்த்தனாவிடம் எழுப்பியபோது, "தொங்கு சட்டசபை அமைந்தாலும் நிச்சயம் பாஜக உடன் கூட்டணி இருக்காது. மிசோரம் விவகாரத்தை பாஜக மிக மோசமாகக் கையாள்கிறது. இதற்கு மக்களிடையே கடும் கோபம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்பதை மிசோரம் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பகிரங்கமாக அறிவிப்பு. தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளின் படி, காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்களே அங்கு ஆட்சியமைக்க முடியும் என்று கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!