Politics
"பாஜக ஆட்சிக்கான கவுண்டவுன் சங்கை வேலையில்லா இளைஞர்கள் ஊதுவார்கள்" : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலை என்ற பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பா.ஜ.க ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது. மந்தநிலை மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், மோடி அரசாங்கம் இதுபோன்ற “வேலையின்மை கண்காட்சியை” ஏற்பாடு செய்துள்ளது, இது கோடிக்கணக்கான இளைஞர்களை வீடு வீடாக அலைய வைக்கிறது. நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பாஜக ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!