Politics
கொடநாடு கொலை, கொள்ளை: கூடுதல் விசாரணைக்கு தடையில்லை - EPS & Co-க்கு இறுகும் பிடி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து கொடநாடு வழக்கு காவல்துறை சாட்சியாக அப்போது சேர்க்கப்பட்டிருந்த அனுபவ் ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் வழக்கு விசாரணையில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மாஜிஸ்ரேட் நீதிமன்றம் வழக்கின் அனைத்து அமசங்களையும் கருத்தில் கொண்டே கூடுதல் விசராணைக்கு அனுமதி வழங்கியிருப்பதால் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!