Politics
“இது திராவிட மண்; இங்கு மதத்தின் பேரில் அரசியல் செய்ய முடியாது” - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு! #DMK4TN
உதகை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கணேசனை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மஞ்சூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா :- “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆறு ஆண்டுகள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியும், நான்காண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் எடப்பாடி பழனிசாமி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரம் அளித்து வரும் நிலையில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் நொண்டி அடித்துக் கொண்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
பாஜகவும் - அதிமுகவும் கூட்டணி சேர்ந்து இந்துத்துவாவை புகுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர் தமிழகம் என்றைக்கும் திராவிட மண், இந்த மண்ணில் மதத்தின் பெயரால் அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்ட ஆ.ராசா தமிழ்நாட்டில் இந்து மத தத்துவவாதிகளை நுழைய விடக்கூடாது, தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சமம் என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!