Politics
''உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தமிழக அரசு சதி செய்கிறது'' - முத்தரசன் குற்றச்சாட்டு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''அரசால் குடிமராமத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 1000 கோடியில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீரை வெளியேற்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் அதிமுக அரசு தெளிவாகச் செய்து கொண்டிருக்கிறது.
மாவட்டங்களைப் பிரித்ததற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முதல்வர் கூறுவது மோசடித்தனமானது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த எடப்பாடி அரசு சதி செய்கிறது.
மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கல்லூரிகளை பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறாவிட்டால் இந்த மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றதே பயனில்லாமல் போய்விடும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!