Politics
‘டயர் நக்கி’ சொல்லாடலை வைத்து பா.ம.க.,வினரை கிண்டலடித்த அ.தி.மு.க பிரமுகர்!
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி அமைவதற்கு முன்பு வரை, டாக்டர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மத்திய பா.ஜ.க அரசையும், மாநில அ.தி.மு.க அரசையும் இடைவிடாமல் விளாசி வந்தனர்.
எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியபோது, போராட்டம் தடை செய்யப்பட்டதால், கடும் கோபத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 'டயர் நக்கி' என கடுமையாக விமர்சனம் செய்தார் அன்புமணி ராமதாஸ்.
அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து 7 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் பெற்ற பிறகு, பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனார்கள் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும். யாரை ‘டயர் நக்கி’ எனச் சொன்னார்களோ அவர்களோடு ஒரே வேனில் பிரச்சாரம் செய்தார்கள்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க ஆதரவாளராகப் பங்கேற்ற அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் டாக்டர்.சமரசம், “டயர் நக்கி எனச் சொன்னவர்களை டயர் பின்னால் ஓட வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” எனப் பேசியுள்ளார்.
நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் மேயர் சீட் கேட்டு வருகின்றன. மேயர் தேர்வு மறைமுக தேர்தலாக நடத்தப்படும் என அறிவித்திருப்பதன் மூலம், கூட்டணிக் கட்சிகளுக்கு ‘கல்தா’ கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தோல்வி பயம் ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகளை ‘ஆஃப்’ செய்யவே எடப்பாடி பழனிசாமி இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க பிரமுகர் பா.ம.க தலைவர்களை சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!