Politics
“ஒரே நாடு ஒரே மொழி” என்பது தேசத்துக்கு கேடு விளைவிக்கும் - கே.எஸ்.அழகிரி பேச்சு!
காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
அப்போது, “5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனக் கூறியிருப்பது சமூக நீதிக்கு எதிரானது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பற்றி தொலைக்காட்சி நேர்காணலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அமைச்சருக்கான தகுதி ராஜேந்திர பாலாஜியிடம் இருக்கவேண்டும்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே மொழி என்பது தேசத்துக்கு கெடுதல் விளைவிப்பதாக இருக்கிறது. இந்தி பரவலாக பேசக்கூடிய மொழியே தவிர எல்லோராலும் பேசப்படும் மொழி அல்ல.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமித்ஷா பேசி இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்பதற்காகவே ப.சிதம்பரத்தை பா.ஜ.க கைது செய்துள்ளது. சிறைவாசத்தைக் கண்டு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது” என கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!