Politics
லண்டனில் முதலமைச்சருக்கு எதிர்ப்பு காட்டிய பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் - அப்செட்டில் எடப்பாடி
அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு பயணத்தை தொடங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் லண்டன் சென்ற முதல்வருக்கு அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் வருகை தந்த அதே நேரத்தில் லண்டன் விமான நிலையத்தில் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களும் மாற்று வழியில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் காட்டப்பட்ட இந்த எதிர்ப்பு, அவமானகரமாகவே பார்க்கிறாராம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!