Politics
லண்டனில் முதலமைச்சருக்கு எதிர்ப்பு காட்டிய பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் - அப்செட்டில் எடப்பாடி
அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு பயணத்தை தொடங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் லண்டன் சென்ற முதல்வருக்கு அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் வருகை தந்த அதே நேரத்தில் லண்டன் விமான நிலையத்தில் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களும் மாற்று வழியில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் காட்டப்பட்ட இந்த எதிர்ப்பு, அவமானகரமாகவே பார்க்கிறாராம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
Also Read
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!