Politics
’செங்கோட்டையில் பா.ஜ.க கொடியேற்றுவது காலத்தின் துயரம்’ - வருத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில், தங்கபாலு, குமாரி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமப்பட்டுப் பல இன்பங்களை இழந்து கிடைத்தது தான் இந்த சுதந்திரம். இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான் காலத்தின் துயரம்.
இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட நாம் தயாராக இருக்க வேண்டும்.ஏனெனில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பறிப்பதில் என்ன ராஜதந்திரம் உள்ளது?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!