Politics
’செங்கோட்டையில் பா.ஜ.க கொடியேற்றுவது காலத்தின் துயரம்’ - வருத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில், தங்கபாலு, குமாரி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமப்பட்டுப் பல இன்பங்களை இழந்து கிடைத்தது தான் இந்த சுதந்திரம். இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான் காலத்தின் துயரம்.
இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட நாம் தயாராக இருக்க வேண்டும்.ஏனெனில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பறிப்பதில் என்ன ராஜதந்திரம் உள்ளது?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!