Politics
’செங்கோட்டையில் பா.ஜ.க கொடியேற்றுவது காலத்தின் துயரம்’ - வருத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில், தங்கபாலு, குமாரி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமப்பட்டுப் பல இன்பங்களை இழந்து கிடைத்தது தான் இந்த சுதந்திரம். இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான் காலத்தின் துயரம்.
இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட நாம் தயாராக இருக்க வேண்டும்.ஏனெனில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பறிப்பதில் என்ன ராஜதந்திரம் உள்ளது?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!