Politics
’செங்கோட்டையில் பா.ஜ.க கொடியேற்றுவது காலத்தின் துயரம்’ - வருத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில், தங்கபாலு, குமாரி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமப்பட்டுப் பல இன்பங்களை இழந்து கிடைத்தது தான் இந்த சுதந்திரம். இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான் காலத்தின் துயரம்.
இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட நாம் தயாராக இருக்க வேண்டும்.ஏனெனில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பறிப்பதில் என்ன ராஜதந்திரம் உள்ளது?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!