Politics
“உங்களைப் போன்றவர்கள் இருந்த காங்கிரஸ் எப்படி உருப்படும்?” - ஜி.கே.வாசனுக்கு ஆளூர் ஷா நவாஸ் கேள்வி!
திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசுகையில், “பிரதமர் கனவு கண்ட பல தலைவர்கள், முன்னாள் தலைவர்களுடைய வாரிசுகளெல்லாம் இன்றைக்கு விலாசம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினுடைய இன்றைய நிலை என்ன? எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.
ஜி.கே.வாசனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மிகநீண்ட காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட ஜி.கே.வாசன் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மூப்பனாரின் வாரிசான ஜி.கே.வாசன், கட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர், கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் தேர்தல் கூட்டணி வைத்ததோடு அல்லாமல், காங்கிரஸின் தோல்வியை கடுமையாக விமர்சித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வி.சி.க-வைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், ஜி.கே.வாசன் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார். அவர், “பா.ஜ.கவுடன் கைகோர்த்து பயணிக்கும் நீங்கள், காங்கிரசின் முக்கிய தலைவராகவே இருந்திருக்கும்போது, இப்போதும் பலர் காங்கிரசில் அவ்வாறு பதுங்கி இருக்கும்போது, அக்கட்சி எப்படி உருப்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!