Politics
“உங்களைப் போன்றவர்கள் இருந்த காங்கிரஸ் எப்படி உருப்படும்?” - ஜி.கே.வாசனுக்கு ஆளூர் ஷா நவாஸ் கேள்வி!
திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசுகையில், “பிரதமர் கனவு கண்ட பல தலைவர்கள், முன்னாள் தலைவர்களுடைய வாரிசுகளெல்லாம் இன்றைக்கு விலாசம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினுடைய இன்றைய நிலை என்ன? எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.
ஜி.கே.வாசனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மிகநீண்ட காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட ஜி.கே.வாசன் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மூப்பனாரின் வாரிசான ஜி.கே.வாசன், கட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர், கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் தேர்தல் கூட்டணி வைத்ததோடு அல்லாமல், காங்கிரஸின் தோல்வியை கடுமையாக விமர்சித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வி.சி.க-வைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், ஜி.கே.வாசன் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார். அவர், “பா.ஜ.கவுடன் கைகோர்த்து பயணிக்கும் நீங்கள், காங்கிரசின் முக்கிய தலைவராகவே இருந்திருக்கும்போது, இப்போதும் பலர் காங்கிரசில் அவ்வாறு பதுங்கி இருக்கும்போது, அக்கட்சி எப்படி உருப்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!