Politics
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நிச்சயம் கவிழும் - காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் : மூத்த வழக்கறிஞர் ஆருடம்
கர்நாடகாவில் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி அரசை கவிழ்த்து பா.ஜ.க ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களிடையே குதிரை பேரம் பேசி ராஜினாமா செய்ய வைத்து உள்ளே வெளியே ஆட்டத்தை ஆடி வருகிறது.
இதனையடுத்து காங்கிரஸில் 13 பேரும், ம.ஜ.த-வில் மூவரும் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் 10 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட மறுத்துள்ளது.
இதற்கிடையே, நாளை (ஜூலை 18) கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நிச்சயம் கர்நாடகாவில் கூட்டணி அரசு கவிழும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொறடா உத்தரவு மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!