Politics
வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார் !
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். மேலும் மூன்று நாட்களில் 15 பொது நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார்.
டில்லியில் இருந்து இன்று பகல் 2 மணிக்கு புறப்பட்ட ராகுல், ஹரிப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து 3 மணிக்கு திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
முதல் நாளான இன்று அங்கு திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிலம்பூர், எறநாடு, ஹரிக்கோட் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ராகுலுடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!