Politics
வெற்றி பெற பணம் தேவை இல்லை என மக்கள் நிரூபித்து உள்ளார்கள்-தம்பிதுரைக்கு ஜோதிமணி பதிலடி!
கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்திரர். அப்போது பேசிய அவர் :-
மக்களவை,இடைத்தேர்தல் என கரூர் தேர்தல் களம் மிக கடினமாக இருந்தது,ஆனாலும் மக்கள் என்னை அமோக வெற்றி பெற செய்து உள்ளார்கள்.இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி அல்ல ! சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி.
என்னுடைய வெற்றிக்கு திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர், அதே நேரத்தில் என்னை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளார்கள் நான் நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். பாராளுமன்றத்தில் நிச்சயம் தமிழக மக்களுக்காக அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மூத்த அரசியல்வாதி ஆகவே நான் அவரை மதிக்கிறேன்.ஆனால் தேர்தலுக்கு முன்பாக "அவரிடம் பணம் இல்லை அதானால் நான் அவரை தோற்கடிப்பேன்" என்று அவர் கூறியதற்கு மக்கள் கரூர் தேர்தல் முடிவின் மூலம் பணம் தேவை இல்லை என்று பதிலளித்துள்ளார்கள்.பண பலம்! அதிகார பலத்தை நம்பி உள்ள அனைவருக்கும் மக்கள் கூறி உள்ளார்கள் வெற்றி பெற பணம் பலம் தேவை இல்லை என்று.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சியாக தான் இருந்தது. ஆனால் இம்முறையும் அதே நிலை தான் தொடரபோகிறது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதால் அதை தலை வணங்கி ஏற்று கொள்கிறேன்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !