Politics
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி வி.சி.க தலைவர் திருமாவளவன் மனு!
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நாளன்று தலித் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பானைகள் உடைக்கப்பட்டன என்று கூறினார். மேலும் தாக்குதல் காரணமாக தலித் மக்களால் முழுமையாக வாக்களிக்க முடியவில்லை என்று கூறினார்.
முன்னதாக, பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!