Politics
தேசப்பற்று என்று வந்தால் பாகிஸ்தானை பற்றி பேசுகிறார் : மோடியை விளாசிய பிரியங்கா காந்தி!
உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியின் போது பிரியங்கா காந்தி பேசுகையில் ‘‘என்னிடம் 56 இன்ச் மார்பு உள்ளது என்று பெருமையாக கூறிவந்தீர்கள். அதற்குள் இருக்கும் இதயத்தை எங்கே என்று மோடியிடம் நான் கேட்கிறேன். என்று கேள்வியெழுப்பினார்.
தேசப்பற்று என்று வந்தால் மோடி பாகிஸ்தானை பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பது பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான? இல்லை அவர் அதுதான் தேசப்பற்று என்று நினைக்கிறாரா? . மோடி அவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனைகள் இவைகளெல்லாம் தேசப்பற்று கிடையாது என நினைக்கிறார் போல, கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியை உலகின் எந்த பக்கத்திலும் பார்த்திருக்கலாம். ஆனால், சொந்த நாட்டின் விவசாயிகளை சந்திப்பது குறித்து ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது.
விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பா.ஜனதா கூறுகிறது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருநாளைக்கு தலா மூன்று ரூபாய்தான் கிடைக்கும். இதனால் அவர்கள் விவசாயிகளை அவமானம் படுத்துகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்புகைளை அழித்துள்ளனர். பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்’’ என்று அவர் தெரிவித்தார்.
Also Read
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!